For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்ன 'டிரஸ்' போட வேண்டும் என்பதை கிளப்புகள் தீர்மானிக்க முடியாது - ஞானதேசிகன்

Google Oneindia Tamil News

சென்னை: உடை என்பது மனித நாகரீகத்தின் ஓர் அடையாளம். அது எந்த உடையாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கின்ற உரிமையை, சென்னை கிரிக்கெட் கிளப் நிர்வாகம் வைத்துக் கொள்ள முடியாது. இந்த நிகழ்ச்சி பலமுறை நடந்திருக்கிறது. இது இனிமேல் தொடர அனுமதிக்க கூடாது என்று வற்புறுத்துகின்றேன் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

TNCC president condemns MCC for banning dhoti

சென்னையில் உள்ள ஒரு கிளப்பில் உயர்நீதிமன்ற நீதிபதியும், மூத்த வழக்கறிஞர்களும் வேட்டி கட்டி ஒரு தனியார் நிகழ்ச்சிக்குப் போகிறபோது, உள்ளே செல்ல அனுமதிக்காமல் தடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி வேதனைக்குரியது.
யார் வேட்டி கட்டிப் போனார்கள் என்பது முக்கியமல்ல. ஆனால், தமிழகத்தில் நடக்கின்ற ஒரு கிளப்பில் வேட்டி கட்டி உள்ளே வரக்கூடாது என்ற விதியை ஏற்க முடியாது.

ஒரு கிளப்பில் உறுப்பினர்கள் ஆனபிறகு, அந்த கிளப் சட்டதிட்டம் அந்த உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தும். ஆனால், அந்த கிளப்பில் உறுப்பினர்கள் அல்லாதவர்களை இந்த விதி கட்டுப்படுத்தாது. அதைவிட இந்த கிளப்புகள் எல்லாம் சட்டத்திற்கு உட்பட்டு, விதிகளை இதற்கென்று உள்ள அதிகாரியிடம் பதிவு செய்து நடப்பவை.

இந்த விதிகளை சங்கங்கள் பதிவு சட்டம் என்ற சட்டத்தின் அடிப்படையில் அந்த அதிகாரி வேட்டி கட்டி உள்ளே வரக்கூடாது என்ற விதி இருந்தால் அந்த விதியை நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடை என்பது மனித நாகரீகத்தின் ஓர் அடையாளம். அது எந்த உடையாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கின்ற உரிமையை, கிளப் நிர்வாகம் வைத்துக் கொள்ள முடியாது. இந்த நிகழ்ச்சி பலமுறை நடந்திருக்கிறது. இது இனிமேல் தொடர அனுமதிக்க கூடாது என்று வற்புறுத்துகின்றேன் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
TNCC president Gnanadesikan has condemned the MCC for banning dhoti.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X