'2020 குரூப் 1 தேர்வு' ஜன.20 முதல் விண்ணப்பிக்கலாம்.. டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
2020ம் ஆண்டுக்கான குரூப்-1 தேர்வுக்கு ஜனவரி 20ம்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி என அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. எனினும் முழு விவரத்தை வெளியடவில்லை.
2018 -19ம் ஆண்டுக்கான குரூப் 1 தேர்வு இறுதி முடிவுகள் நேற்று வெளியானது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விரைவில் கலந்தாய்வு நடக்க உள்ளது. இந்நிலையில் 2020ம் ஆண்டுக்கான குரூப் 1 தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பினை புத்தாண்டு தினமான இன்ற டிஎன்பிஎஸ்சி அறிவித்தள்ளது.
குரூப் 1 தேர்வுக்கான அறிவிக்கை விரைவில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ள டிஎன்பிஎஸ்சி, வருகிற ஜனவரி 20ம் தேதி முதல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற பிப்ரவரி 19ம் தேதி என்றும் அறிவித்துள்ளது.
குரூப் 1 தேர்வு எழுத்துத் தேர்வு ஏப்ரல் 5ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
பதவி வாரியாக காலி பணியிடங்கள், வயது வரம்பு உள்ளிட்ட விரிவான முழு அறிவிக்கை விரைவில் www.tnpsc.gov.in என்ற டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உற்சாக மிகுதி.. சர்ரு புர்ருன்ணு அதிவேகத்தில் அலப்பறை.. 100 பைக்குகள் பறித்தது சென்னை போலீஸ்