TNPSC Group 4: தேர்வு மையத்திலேயே ஹால் டிக்கெட்டை கிழித்து வீசிய இளைஞர்.. அனுமதி மறுப்பால் ஆத்திரம்!
கள்ளக்குறிச்சி: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு சற்று தாமதமாக வந்ததால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இளைஞர் ஒருவர் தேர்வு மையத்துக்கு முன்பே ஹால் டிக்கெட்டை கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
டிஎன்பிஎஸ்சி குருப் 4 எழுத்து தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 4,922 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னையில் மட்டும் 311 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்தத் தேர்வு 12.30 மணி வரை நடைபெறும்.

3,935 காலி பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வன கண்காணிப்பாளர் என 25 போஸ்டர்களுக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் எல்லாம் இந்த தேர்வு எழுதலாம் என்பதால் அதிகமானோர் இந்த தேர்வை எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் 13,89,738 தேர் தேர்வு எழுதுகிறார்கள். சென்னையில் மட்டும் 94 ஆயிரத்து 848 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட தேர்வுக் கூடத்திற்கு விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுச் சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு 9 மணிக்கு முன்னரே சென்று விடுமாறு அறிவுறுத்தப்பட்டனர். 9 மணிக்கு மேல் வரும் விண்ணப்பதாரர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வுக் கூடத்தில் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் இந்த தேர்விற்குரிய தேர்வுக்கூட அனுமதி சீட்டினை கட்டாயம் தேர்வுக்கூடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
அந்தவகையில், தமிழ்நாடு முழுவதும் இன்று தேர்வு மையங்களில் 9 மணிக்கு மேல் தேர்வு மையத்துக்கு வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்துக்கு இன்று காலை 9 மணியளவில் தேர்வர் ஒருவர் தேர்வு எழுத வந்தார். அவரை உள்ளே அனுமதிக்க போலீசார் மறுத்தனர்.
இதையடுத்து அவர் தன்னை அனுமதிக்குமாறு கோரினார். ஆனால், 9 மணிக்கு மேல் யாருக்கும் அனுமதி இல்லை என ஸ்ட்ரிக்டாக கூறப்பட்டதால் ஆவேசமடைந்த அந்த இளைஞர், அங்கேயே ஹால் டிக்கெட்டை கிழித்துப் போட்டுவிட்டு கோபமாகக் கிளம்பினார். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications