பஸ் ஊழியர்களின் திடீர் ஸ்டிரைக்கால் மக்கள் கடும் கோபம் - அதிருப்தி!
சென்னை: தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நா்ளை முதல் ஸ்டிரைக் செய்வதாக அறிவித்திருந்த நிலையில் இன்று அதிகாலை முதல் அறிவிக்காமல் முன்கூட்டியே ஸ்டிரைக்கைத் தொடங்கியதால் மக்கள் மத்தியில் கடும் கோபமும், அதிருப்தியும் தலை தூக்கியுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்துத் துறையில் பணியாற்றி வரும் 1.43 லட்சம் பேருக்கான 12-வது ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தாததைக் கண்டித்து தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யுசி, தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் தொழிற்சங்கங்கள் உட்பட மொத்தம் 11 தொழிற்சங்கங்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் வரும் 29-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக முடிவு செய்து அறிவித்தனர்.

இந்நிலையில் நாளைமுதல் தொடர் போராட்டம் என்று அறிவித்த தொழிற்சங்கங்கள் இன்று முதல் தங்களது போரட்டத்தை தொடங்கியுள்ளனர். இது மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. தற்போது கிறிஸ்துமஸ் , பள்ளிகள் விடுமுறை என தொடர் விடுமுறைகளால் தங்கள் சொந்த ஊருக்கு வந்த மக்களை வதைக்கும் வண்ணம் இந்த போராட்டங்கள் அமைந்துள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் வருடத்தின் பிறநாட்களை விட்டுவிட்டு வருடத்தின் கடைசி நாட்களில் போராட்டங்களை நடத்தி வருவதும், பொதுமக்களை சிரமத்திற்க்குள்ளாக்குவதும் இவர்களது வாடிக்கையான செய்யலாக உள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
ஒருபக்கம் எதிர்கட்சிகளின் தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டம் அவர்களுக்கு வெற்றி போல் காட்சியளித்தாலும் ஆளும் கட்சியானது, புதிதாக பணிக்கு தேர்வு செய்து இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருக்கும் தற்காலிக டிரைவர், கண்டக்டர்களை வைத்து பொது மக்களுக்கு சிரமங்கள் ஏற்படாவண்ணம் பேருந்துக்களை காலைமுதல் இயக்கி வருகிறது.

மேலும் தமிழக கேரளா எல்லைப் பகுதிகளில் வழக்கம் போல் அனைத்து உள்ளூர் வெளியூர், வெளிமாநிலங்களுக்கு செல்லும் பேருந்துக்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் நாளை முதல் நிலைமை சிக்கலாகும் என்று தெரிகிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications