For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதியின் எழுத்தால் ஈர்க்கப்பட்டவன் நான்.. டி.ராஜா நெகிழ்ச்சி

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டவன் நான் என்று டி.ராஜா தெரிவித்தார்.

கருணாநிதியின் 94-ஆவது பிறந்தநாள் விழாவும், அரசியலுக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவானதை தொடர்ந்து வைரவிழாவும் இன்று மாலை தொடங்கியது. இதில் முதன்மை பொதுச் செயலாளர் துரைமுருகன் வரவேற்புரை அளித்து பேசினார். இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேதிய செயலாளர் டி.ராஜா பேசினார்.

To avoid communal parties we have to join together, says D.Raja

அப்போது அவர் பேசுகையில், கலைஞர் கருணாநிதி மிகச் சிறந்த போராளி. வரலாற்றில் அற்புதமான பண்புகளை கொண்டவர் கருணாநிதி. நான் கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது அவரது எழுத்துகளால் ஈர்க்கப்பட்டேன்.

கருணாநிதியின் பேச்சாற்றல், எழுத்தாற்ல் பாதிக்கப்பட்ட ஒரு தலைமுறையை சேர்ந்தவன் நான். அவர் பன்முக ஆளுமை கொண்டவர். கூட்டாட்சி தத்துவம் கொண்ட இந்த இந்திய நாட்டை பரிணாம நாடாக மாற்ற அச்சுறுத்தல் நடக்கிறது.

கருணாநிதியின் வழியை ஸ்டாலின் பின்பற்றுவார். எனவே மதவாத சக்திகளுடன் எதிர்க்க அவர் எங்களுடன் அணி திரள வேண்டும். கருணாநிதி இன்று மேடையில் இருந்திருந்தால் மாநில கூட்டாட்சி காப்பாற்றப்பட வேண்டும் என குரல் கொடுத்திருப்பார். அப்படி குரல் கொடுக்கும் முதல் தமிழராக கருணாநிதி இருந்திருப்பார் என்றார் அவர்.

English summary
Markxist communist national secretary Raja invites Stalin to join with them against communal forces.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X