பெட்ரோல் லிட். 5 பைசா, டீசல் லிட். 3 பைசா விலை குறைவு
பெட்ரோல், டீசல் விலை இன்றும் குறைந்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 5 காசுகளும், டீசல் 3 காசுகளும் குறைந்துள்ளது.
சென்னை: பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் குறைந்துள்ளது. பெட்ரோலின் விலை 5 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.70.85ஆகவும், டீசலின் விலையில் 3 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.59.99ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
பெட்ரோல், டீசல் மீதான விலையை, எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதில் மாதம் இருமுறை என்றிருந்த நடைமுறை, நாள்தோறும் என மாற்றப்பட்டது.
ஆனால் மாநில அரசின் வாட், கூடுதல் வரிகளால் பெட்ரோல், டீசலின் விலை தொடர்ந்து ஏறுமுகமே சென்று வருகிறது. ஒருகட்டத்தில் பொதுமக்களால் பயன்படுத்த இயலாத அளவிற்கு எரிபொருட்கள் சென்றுவிடும் என்று அஞ்சத் தோன்றியது.
வாட் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்த நிலையில் சில மாநிலங்கள் வாட் வரியை குறைத்து வருகின்றன. தற்போது பெட்ரோல்,டீசல் விலை குறைந்து வருகின்றன. பெட்ரோலின் விலை 5 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.70.85ஆகவும், டீசலின் விலையில் 3 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.59.99ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த விலை குறைப்பு காலை 6 மணிமுதல் அமலுக்கு வந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநில அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைத்துள்ளது. பெட்ரோலுக்கு 3%, டீசலுக்கு 5% என வரி குறைக்கப்பட்டுள்ளது.
இது பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பெட்ரோல் மீதான கூடுதல் வரி ரூ.1.50ம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பெட்ரோல் விலையில் ரூ.1.70ம், டீசல் விலையில் ரூ.4ம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.1000 கோடி இழப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல தமிழகத்திலும் வாட் வரி குறைக்கப்பட்டால் பெட்ரோல், டீசல் விலை அதிக அளவில் குறைய வாய்ப்பு உள்ளது.