யாருக்கு ஓட்டு?.. இந்த 5 'மேட்டர்'தான் தமிழக வாக்காளர்களின் மனதை தீர்மானிக்கப் போகிறதாம்!
சென்னை: தமிழக மக்களைப் பொறுத்தவரையில்மின்வெட்டை எதிர்க்கட்சிகள் பெரும் பிரச்சினையாக கூறி வந்தாலும் கூட மக்களைப் பொறுத்தவரை அதற்கு 2ம் இடம் தான் கிடைத்துள்ளது.
மக்களை வாட்டி வதைக்கும் பிரச்சினைகளில் முதல் இடத்தை விலைவாசி உயர்வுதான் பிடித்துள்ளது.
சிஎன்என்ஐபிஎன் கருததுக் கணிப்பில் இப்படித் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து முக்கியப் பிரச்சினைகள்தான் மக்களிடையே பெரும் தேர்தல் பிரச்ச்சினையாக மாறியுள்ளதாகவும் அது கூறுகிறது.
அதைப் பார்க்கலாம...

விலைவாசி உயர்வு
விலைவாசி உயர்வுதான் முக்கியப் பிரச்சினை என்று 20 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். விலைவாசி உயர்வுதான் தங்களை வெகுவாக பாதித்துள்ளதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மின் வெட்டு
மின்வெட்டு மக்களின் 2வது பெரும் கவலையாக உள்ளது. மின்விநியோகம் குறித்து 13 சதவீதம் பேர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

ஊழலுக்கு 3வது இடமே
ஊழலைப் பொறுத்தவரை மக்கள் 3வது இடத்தையேக் கொடுத்துள்ளனர். 12 சதவீதம் பேரே ஊழலை ஒரு முக்கியப் பிரச்சினையாக கூறியுள்ளனர்.

வேலையில்லாத் திண்டாட்டம்
வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு பிரச்சினை என்று கூறியிருப்போர் 5 சதவீதம் பேரே.

குடிநீர் விநியோகம்
குடிநீர் விநியோகம் சரியில்லை என்று கவலை தெரிவித்தோர் எண்ணிக்கை 4 சதவீதம்தான்.












Click it and Unblock the Notifications