திருவாரூரில் சுற்றுலா பேருந்து விபத்து : ஓட்டுநர் தூங்கியது காரணமா? - வீடியோ
சுற்றுலா பேருந்து ஓட்டிய டிரைவர் சில நொடிகள் கண் அசந்து உறங்கியதால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. அதில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
திருவாரூர்: சுற்றுலா பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் கண்ணயர்ந்து விட்டதால் விபத்து ஏற்பட்டு பயணிகள் படுகாயம் அடைந்த சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஶ்ரீபெரும்புதூரிலிருந்து தரங்கம்பாடிக்கு ஒரு தனியார் பேருந்தில் சுற்றுலா சென்றுள்ளார்கள். அப்போது, பேருந்து ஓட்டுநர் திருவாரூர் அருகே ஊர்க்குடி என்னும் ஊரில் பேருந்து செல்கையில் சில நிமிடங்கள் கண்ணயர்ந்து விட்டார்.

அந்த சில நொடிகளில் பேருந்து கட்டுப்பாடு இன்றி ஓடி தலைகீழாக கவிழ்ந்துவிட்டது. இதில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் 20 பேர் பலத்த காயமடைந்தனர். அதனையடுத்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்துகள் அதிகம் ஏற்படும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications