For Daily Alerts
Just In
வேனில் தீ வைத்த மர்ம நபர்கள்.. எடப்பாடியில் பரபரப்பு
சேலம் மாவட்டம் எடப்பாடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனில் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
சேலம்: எடப்பாடி நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனில் மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி டூரிஸ்ட் வேன் மார்க்கெட்டில் வேன்கள் பல நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். நேற்றிரவு அதில் ஒரு வேன் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்து தீயை அணைத்தனர். மர்ம நபர் யாரோ வேனுக்கு தீ வைத்து விட்டு ஓடிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன் விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் எந தெரிகிறது.
எடப்பாடி போலீசார் இதுகுறித்து விசரணை நடத்தி வருகிறார்கள்.
Comments
English summary
Tourist van caught fire at Edappadi in Salem district.
Story first published: Monday, December 26, 2016, 8:32 [IST]