பொங்கல் விடுமுறை நிறைவடைந்தது.. சென்னைக்கு திரும்பும் மக்களால் டிராபிக் நெரிசல்
சென்னை: பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கு பிறகு சொந்த ஊர்களில் இருந்து சென்னையில் குவியும் மக்களால் சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பொங்கலை முன்னிட்டு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதலே தமிழக அரசு, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது. இதையடுத்து பலரும் வியாழக்கிழமை இரவே சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு குடும்பத்தோடு பொங்கல் கொண்டாட கிளம்பினர்.
போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என வரிசையாக திருவிழா களை கட்டியது. விடுமுறை நிறைவடையும் நிலையில், வெளியூர் சென்ற மக்கள் இன்று காலையிலேயே சென்னைக்கு திரும்பினர்.
இதனால் பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய டிராபிக் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
கார்கள், பஸ்களிலும், ரயில்கள், விமானங்களிலும் மக்கள் சென்னைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.