ரஜினியை பார்க்க குவிந்த ரசிகர்கள்.. பூந்தமல்லி நெடுஞ்சாலை முழுக்க டிராபிக் ஜாம்.. மக்கள் அவதி!
Recommended Video

சென்னை: ரஜினிகாந்த் வருகையால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் கஷ்டத்தை அனுபவித்தனர்.
சென்னை அடுத்த வேலப்பன் சாவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மதுரவாயலில் உள்ள எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறும் நூற்றாண்டு விழா மற்றும் எம்.ஜி.ஆர். வெங்கலச் சிலை திறப்பு விழா நிகழ்ச்சிகளில் ரஜினிகாந்த் கலந்துகொள்கிறார்.

இதையடுத்து மதியம் முதலே ரசிகர்கள் சாலையின் இருபுறமும் குவியத் தொடங்கினர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ரஜினியை வரவேற்று விதவிதமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக போஸ்டர் கலாச்சாரம் தலைதூக்கியுள்ளதே என நிருபர்கள் ரஜினிகாந்த்திடம் கேள்வி எழுப்பியபோது, இதுபற்றி ரசிகர்களிடம் தான் அறிவுரை வழங்க உள்ளதாக கூறினார்.
ரஜினிவருகையையொட்டி மாலையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில், கோயம்பேடு, மதுரவாயல் உள்ளிட்ட பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரசிகர்கள் சாலையில் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.
திறந்தவெளி வாகனத்தில் ரஜினிகாந்த் மக்களை பார்த்து கையசைத்தபடியே சென்றதால் அவரை பார்க்க கூட்டம் கட்டுகடங்காமல் இருந்தது.












Click it and Unblock the Notifications