ஜெ., வெற்றியை எதிர்த்து டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி
சென்னை: ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா வெற்றியை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு ஜீன் 27 ஆம் தேதி ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில், அதிமுக சார்பில் ஜெயலலிதாவும், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மகேந்திரனும், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும் போட்டியிட்டனர். இதில், ஜெயலலிதா ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதனை எதிர்த்து டிராபிக் ராமசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில், சென்னை ஆர்.கே. நகர் சட்டப் பேரவை தொகுதிக்கு, கடந்தாண்டு ஜூன் 27-இல் இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெற்றி பெற்றார். அதே தொகுதியில், நானும் போட்டியிட்டேன். பல்வேறு முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் செய்து, ஜெயலலிதா வெற்றி பெற்றுள்ளார். எனவே, அவரது தேர்தல் வெற்றியை ரத்து செய்ய வேண்டும்.
மேலும் வெற்றியை செல்லாது என்றும் அறிவிக்குமாறு மனுவில் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் சார்பில் யாரும் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகாததால், டிராபிக் ராமசாமி சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications