டிராபிக் ராமசாமியின் உதவியாளர் பாத்திமா திடீர் மரணம்
டிராபிக் ராமசாமி உதவியாளர் பாத்திமா உயிரிழந்தார்.
திருச்சி: சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் உதவியாளர் பாத்திமா திருச்சி மருத்துவனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
டிராபிக் ராமசாமியிடம் 8 வருடத்துக்கும் மேலாக உதவியாளராக இருந்தவர் பாத்திமா. இவர் மக்கள் பாதுகாப்பு கழகத்தின் பொதுச் செயலாளராகவும் இருந்தவர்.

ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டார். அப்போது முதலில் பாத்திமாவைதான் வேட்பாளராக அறிவித்திருந்தார். அதன்பிறகு பாத்திமாவுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டு, இறுதியில் டிராபிக் ராமசாமியே போட்டியிட்டார். (அதில் அவர் நோட்டாவை மட்டும்தான் ஜெயிக்க முடிந்தது.)
இந்நிலையில், டிராபிக் ராமசாமியின் உதவியாளர் பாத்திமாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் திருச்சி மருத்துவனையில் இருதய அறுவைச் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். பாத்திமாவின் உடல் அவரது சொந்த ஊர் உமையாள்புரத்தில் பொதுமக்களின் பார்வைக்கு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications