மெட்ரோ ரயில் பணியின்போது ரசாயன கசிவு - அண்ணா சாலையில் போக்குவரத்து 'ஜாம்'
சென்னை:மெட்ரோ ரயில் பணியின் போது ரசாயனம் வெளியேறியதால் சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அண்ணா சாலையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணியின்போது ரசாயனக் கலவை வெளியேறியதால் வியாழக்கிழமை மாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை அண்ணா சாலை - வாலாஜா சாலை சந்திப்பில் மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஒரு வகையான ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரசாயனத்தை கலக்கும் பணி வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் நடைபெற்றது. அப்போது மணலுடன் சேர்ந்த ரசாயன நீர் சாலையில் வெளியேறியது.
இதன் காரணமாக அண்ணா சாலை - வாலாஜா சாலை இடையே வாகன நெரிசல் ஏற்பட்டு, 30 நிமிடங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெளியேறிய ரசாயன நுரையுடன் மணலும் கலந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். பின்னர் சிறிது நேரம் கழித்து அண்ணா சாலையில் போக்குவரத்து சீரானது.
இது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரி "திடீரென இத்தகைய ரசாயன நீர் வெளியேறிவிட்டது. இது சுரங்கம் தோண்டுவதற்காக தினமும் பயன்படுத்தப்படுவதுதான். சுமார் 3 மணி நேரத்துக்குப் பின், சாலையில் கசிந்த நுரை கலந்த மணல் அப்புறப்படுத்தப்பட்டது. சுரங்கம் தோண்ட பயன்படுத்தப்பட்ட இயந்திரப் பாகங்களும் சரிந்ததால், அப்புறப்படுத்த தாமதம் ஆகிவிட்டது" என்று கூறினார்.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications