முக்கோண காதலால் விபரீதம்... தோழியை கொன்றுவிட்டு இளம்பெண் தற்கொலை!
கடலூரில் முக்கோண காதலால் தோழியைக் கொன்றுவிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் : முக்கோண காதல் விபரீதத்தால் தோழியைக் கொன்றுவிட்டு 19 வயது இளம்பெண் போலீசார் கண்முன்னே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் புலியூர் காட்டுசாகை கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது திவ்யா. கீழ்காங்கேயன்குப்பம் கிராமத்தை சேர்ந்த 19 வயது ஜெயசித்ரா இருவரும் தோழிகள். திவ்யா சாத்தமாம்பட்டு கிராமத்தில் தன் சித்தி வீட்டில் தங்கி நர்சிங் டிப்ளமோ படித்து வந்துள்ளார். இருவரும் இணை பிரியாத தோழிகளாக சுற்றி வந்துள்ளனர்.
ஆனால் திடீரென கடந்த மே 8ம் தேதி முதல் திவ்யாவை காணவில்லை, இதனையடுத்து பெற்றோர் காடாம்புலியூர் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதில் திவ்யாவின் தோழி சித்ராவிடம் நடத்திய விசாரணையின் போது திவ்யாவை கொன்று சித்ரா புதைத்துள்ளது தெரிய வந்துள்ளது.

காதலனை காதலித்த தோழி
ஆனத்தூரைச் சேர்நத் விஜயராஜ் என்பவரை திவ்யாவிற்கு ஜெயசித்ரா அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனையடுத்து விஜயராஜும் திவ்யாவும் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயசித்ரா பலமுறை திவ்யாவை எச்சரித்துள்ளதாக தெரிகிறது.

மதுவில் விஷம் கொடுத்து கொலை
எனினும் இருவரின் காதல் தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த ஜெயசித்ரா திவ்யாவிற்கு வேலை வாங்கித்தருவதாகக் கூறி அழைத்து சென்றுள்ளார். பண்ருட்டி அருகேயுள்ள திருவாமூருக்கு அழைத்து சென்ற ஜெயசித்ரா கெடிலம் ஆற்றங்கரையில் திவ்யாவிற்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து வற்புறுத்தி குடிக்க வைத்துள்ளார்.

ஆற்றில் புதைத்து மறைப்பு
இதனையடுத்து மயங்கி விழுந்த திவ்யாவை நண்பர் மோகனுடன் சேர்ந்து ஆற்றில் குழி தோண்டி புதைத்துள்ளார். திவ்யாவை காணவில்லை என்ற புகாரில் ஜெயசித்ராவின் மீது சந்தேகப் பார்வை போனதையடுத்து இந்த உண்மைகள் தெரிய வந்துள்ளன. இதனையடுத்து ஜெசித்ராவை போலீசார் கைது செய்து நேற்று ஆற்றங்கரையில் திவ்யாவை புதைத்த இடத்தை அடையாளம் கண்டு பிரேதத்தை தோண்டி எடுத்தனர்.

கிணற்றில் குதித்து தற்கொலை
இந்நிலையில் சித்ரா போலீசாரின் பிடியில் இருந்து விலகி ஓட்டம் பிடித்துள்ளார். அவரை போலீசார் துரத்தி சென்ற நிலையில் அருகில் இருந்த 150 அடி ஆழ கிணற்றில் குதித்துள்ளார். கிணற்றில் தண்ணீர் இல்லாததால் காயமடைந்த ஜெயசித்ரா உயிரிழந்துள்ளார். முக்கோண காதல் கதை இளம்பெண்கள் இருவரின் வாழ்க்கையையே முடித்துவிட்டது, அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications