ரயில்கள் ரத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு: எஸ்.எம்.எஸ் எச்சரிக்கையை ரத்து செய்த ஐ.ஆர்.சி.டி.சி
மதுரை: மதுரையில் இருந்து டேராடூன் செல்லும் வாராந்திர ரயில், பெங்களூரூ பாட்னா சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நான்கு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல இணை ரயில் ரத்து காரணமாக, சென்னை சென்ட்ரல் - ஜம்முதாவி, புதுச்சேரி - டெல்லி இடையே இயக்கப்படும் ரயில்கள், இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளன.
ரயில்கள் ரத்தான தகவல், இனிமேல், எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்புவதில்லை என, இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.,) முடிவு செய்துள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:
மதுரையில் இருந்து டேராடூன் செல்லும் வாராந்திர ரயில், பெங்களூரூ பாட்னா சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் , கோவை-நிஜாமூதின் வாராந்திர ரயில், சென்னை சென்ட்ரல், டில்லி செல்லும் கிராண்ட் டிரங்க், ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல இணை ரயில் ரத்து காரணமாக அதிகாலை, 5:15 மணிக்கு, சென்னை சென்ட்ரலில் இருந்து ஜம்முதாவிக்கு செல்லும், வாரம் மூன்று முறை, அந்தமான் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டு உள்ளது. காலை, 9:05 மணிக்கு, புதுச்சேரியில் புறப்பட்டு, சென்னை எழும்பூர் வழியாக டில்லி செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
எஸ்.எம்.எஸ் கிடையாது
ரயில்கள் ரத்தான தகவல், இனிமேல், எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்புவதில்லை என, இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.,) முடிவு செய்துள்ளது.
ராஜஸ்தான் கலவரம்
கடந்த மே மாதம், ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த குஜ்ஜார் இன மக்களின் ரயில் மறியல் போராட்டம் காரணமாக, 70க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதுகுறித்த தகவல்களை, ஐ.ஆர்.சி.டி.சி., ரயில் பயணிகளுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் அளித்து வந்தது.
குழம்பிய பயணிகள்
கடந்த மாதம் 28ம் தேதி, இப்படி ஒரு எஸ்.எம்.எஸ். 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளுக்கு வந்தது. ரயில் புறப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன், இந்த எஸ்.எம்.எஸ். வந்த காரணத்தால் பயணிகள் குழப்பம் அடைந்தனர்.
தவறவிட்ட பயணிகள்
இதன் காரணமாக, ரயில்களை தவறவிட்ட, ஏறக்குறைய, 7,000 பயணிகள், தவறான தகவல் தந்தது மற்றும் பயணக் கட்டணம் திரும்ப அளிக்காததற்கான காரணத்தை கூறும்படி, ஐ.ஆர்.சி.டி.சி.,யின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு, மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியுள்ளனர்.
தவறான எஸ்.எம்.எஸ்
இதுகுறித்து, கருத்து கூறியுள்ள ஐ.ஆர்.சி.டி.சி.,யின் குழு பொது மேலாளர் (ஐ.டி.,) சுனில் குமார் ஒரே நாளில் மட்டும், 34 ஆயிரம் எஸ்.எம்.எஸ்.,கள் தவறாக அனுப்பப்பட்டு உள்ளன. குறுஞ்செய்தி கிடைக்கப்பெற்றவர்கள் 7,000 பேர் மட்டும், ரயில்களை தவறவிட்டு உள்ளனர்.
எஸ்.எம்.எஸ் ரத்து
இவர்களுக்கு, பயண டிக்கெட்டுக்கான பணம் முழுவதும் கிடைக்காவிட்டாலும், குறிப்பிட்ட அளவு வழங்கப்படும். இனிமேல், ரயில்கள் ரத்தான தகவல், எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்புவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications