நடிகை ஷகிலாவை மகளாகத் தத்தெடுத்த திருநங்கைகள் தலைவி!
நடிகை ஷகிலாவை தன் மகளாகத் தத்தெடுத்தார் திருநங்கைகள் சங்கத்தின் தலைவரான மோகனாம்பாள்.
விழுப்புரம் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கூடினர். இந்த விழாவின் முக்கிய போட்டியாகக் கருத்தப்படும் மிஸ் கூவாகம் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தின் 36 மாவட்ட திருநங்கை தலைவர்கள் மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆகியவை இணைந்து இந்த மிஸ்கூவாகம் போட்டியை நடத்தினர். இப் போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு மாநிலங்கள், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து 72 திருநங்கைகள் பங்கேற்றனர்.
இவர்களில் நடை, உடை அழகுடன் கேள்விகளுக்கு பதில் அளித்த மதுரை பிரவீனா மிஸ் கூவாகமாக அறிவிக்கப்பட்டார். இவரைத் தொடர்ந்து அடுத்த இடத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த சுஜீயும், 3-ம் இடத்தை மதுரையைச் சேர்ந்த ஹரீனியும் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட நடிகைகள் அனுராதா, ஷகிலா, பாலாம்பிகா ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது திருச்சி திருநங்கைகள் சங்கத் தலைவர் மோகனாம்பாள், தனது மகளாக ஷகிலாவை தத்தெடுத்துக் கொள்வதாக அறிவித்தார்.
இதனை ஷகிலாவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications