Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிருகங்களை விட கேவலமானவர்களா திருநங்கைகள்?: லிவிங் ஸ்மைல் வித்யா கொதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐ படத்தில் தங்களை தவறாக சித்தரித்த இயக்குநர் சங்கரும், நடிகர் விக்ரமும் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்று திருநங்கைகள் வலியுறுத்தியுள்ளனர். மிருகங்களை விட நாங்கள் கேவலமானவர்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இயக்குநர் ஷங்கர் பதில் சொல்லும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று 'ஐ' படத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகள் எச்சரித்தனர்.

'ஐ' படத்தை எதிர்த்து திங்கள்கிழமை காலை சென்னையில் தணிக்கைக் குழு அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது. 'லிவிங் ஸ்மைல்' வித்யா, பானு, ரோஸ் உள்ளிட்ட திருநங்கைகள் பலர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

கேலிக்கூத்தா

கேலிக்கூத்தா

'திருநங்கை என்ன உங்களுக்கு கேலிக்கூத்தா? திருநங்கை காதல் என்ன உங்களுக்கு வக்கிரமா? திருநங்கைகள் ஆதரவற்றவரா? குரலற்றவரா? இயக்குநர் ஷங்கரை கைது செய்' என்ற முழக்கங்கள் இடப்பட்டன.

இது முதற்கட்டப் போராட்டம்தான். ஷங்கரும், தணிக்கை வாரியமும் உயர் நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ திருநங்கை குறித்த தவறான சித்தரிப்புக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். அதுவரை ஓயமாட்டோம்'' என்று பானு கூறினார்.

இதையடுத்து, தணிக்கைக் குழு அதிகாரி பக்கிரிசாமியிடம் பேசிய பானு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, '' 'திருநங்கைகளை இழிவு படுத்தும் காட்சிகள் விரைவில் நீக்கப்படும். இனிமேல், இது போன்ற காட்சிகள் இடம்பெறாது. திருநங்கைகள் குறித்து படத்தில் காட்சி வருமாயின், அது குறித்து படம் பார்க்க திருநங்கைகளுக்கு அழைப்பு விடுக்கிறேன்' என பக்கிரிசாமி உறுதி அளித்துள்ளார்'' என்று பானு தெரிவித்தார்.

கண்ணியம் வேண்டும்

கண்ணியம் வேண்டும்

இதனிடையே, நாடக நடிகையும், திருநங்கையுமான, லிவிங் ஸ்மைல் வித்யா பேசுகையில், ''திரைப்படங்களில் திருநங்கைகளை கண்ணியமாகக் காட்ட வேண்டும். கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. ஒரு பால் ஈர்ப்பினர், திருநங்கைகளை தாக்கும் வசனங்களுக்கு இடம் தரக்கூடாது' என்றார்.

காட்சிகளை நீக்குங்கள்

காட்சிகளை நீக்குங்கள்

'ஐ' படத்தின் கதையைப் பாதிக்காமல், திருநங்கைகளை தவறாக சித்தரிக்கும் காட்சிகளை மட்டும் நீக்க வேண்டும்.

மிருகங்களை விட

மிருகங்களை விட

மிருகங்கள் துன்புறுத்தப்படவில்லை, மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என டைட்டிலில் அறிவிக்கிறார்கள். ஒரு நாய் மேல காட்டும் மரியாதையை மனிதர்களாகிய எங்கள் மீது காட்டாதது ஏன்? இது குறித்து வழக்கு போட முயற்சித்து வருகிறோம்" என்று 'லிவிங் ஸ்மைல்' வித்யா தெரிவித்தார்.

போலீஸ் பாதுகாப்பு

போலீஸ் பாதுகாப்பு

இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் உள்ள இயக்குநர் ஷங்கரின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+