போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.496 கோடி ஓய்வூதியம் ரெடி.. நாளை மறுநாள் கிடைக்கும்.. அமைச்சர் உறுதி
போக்குவரத்து ஊழியர்களுக்கு 496 கோடி ரூபாய் ஓய்வூதியம் நாளை மறுநாள் வங்கிக் கணக்கில் செலுத்த தயாராக உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை: சென்னை தியாகராயநகர் பேருந்து நிலையத்தில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று ஆய்வு செய்தார். போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
பின்னர், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; செப்டம்பர் மாதம் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாகவும் அதன் பிறகு நிலுவையில் உள்ள தொகையினை அளிக்க படிப்படியான முயற்சிகளை மேற்கொள்ள உள்ளது.
இதுகுறித்து முதல்வர் உறுதி அளித்தும் அவற்றை ஏற்காமல் 10 சங்கங்கள் வேலைநிறுத்தத்தை நடத்தி வருகின்றனர். அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 37 சங்கங்கள் அரசு ஆதரவாக வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை.

தற்காலி ஓட்டுநர்கள்
இன்று 75 சதவீத பேருந்துகள் ஓடுகின்றன. மீதி இருக்கும் பேருந்துகளை ஓட்டுவதற்கு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறோம். ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் போக்குவரத்துத் துறை அதிகாரிகளை நாடினால் தினக் கூலி அடிப்படையில் வேலை வழங்கப்படும்.

100 சதவீதம்
நாளை ஆட்களைத் தேர்வு செய்கின்ற போது அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நாளை 100 சதவீத பேருந்துகளை ஓடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கூடுதல் ரயில்கள்
பயணிகளுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க புறநகர் ரயில்களை அதிகம் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. தென்னக ரயில்வே 5 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்க சம்மதித்துள்ளனர். மேலும், மெட்ரோ ரயில் பயணிகளை கவர 40 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம்
போக்குவரத்து கழக ஓய்வூதியம் நாளை மறுநாள் 496 கோடி ரூபாய் கணக்கில் வரவு வைக்க ஏற்பாடு செய்துள்ளோம். எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று விஜயபாஸ்கர் கூறினார்.
-
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்.. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம்












Click it and Unblock the Notifications