கைக்குழந்தைகளுடன் பிச்சை... திருச்சியில் 7 பெண்கள் கைது - வாடகைக் குழந்தைகளா என போலீஸ் விசாரணை
திருச்சி: திருச்சியில் கைக்குழந்தையுடன் பிச்சை எடுத்த 7 பெண்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். அக்குழந்தைகள் வாடகைக்கு எடுக்கப் பட்டவையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியின் புறநகர் பகுதியிலிருந்து குழந்தைகளை வாடகைக்கு வாங்கி வந்து, சில பெண்கள் நகரின் முக்கியமானப் பகுதிகளில் பிச்சை எடுப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கைக்குழந்தைகளை அழவைத்து, அதைக் காட்டி பொதுமக்களிடம் பணம் பெறுவது அப்பெண்களின் திட்டம் ஆகும்.

இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கைக்குழந்தைகளுடன் சில பெண்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த திருச்சி ஆட்கடத்தல் தடுப்பிப் பிரிவு போலீசார் 4 கைக்குழந்தைகளுடன் 7 பெண்களைக் கைது செய்தனர்.

பிச்சையெடுக்க கொண்டு வரப்பட்ட குழந்தைகள் அப்பெண்கள் உடையது தானா அல்லது வாடகைக்கு எடுக்கப் பட்டதா எனப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications