திருச்சி சிறையில் இலங்கை அகதிகள் திடீர் மோதல் – ஒருவர் படுகாயம்!
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி சிறையில் அகதிகளுக்கான சிறப்பு பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் படுகாயமடைந்தார்.
திருச்சி மத்திய சிறையில் அகதிகளுக்கான சிறப்பு சிறைப்பகுதி முகாம் உள்ளது. அப்பகுதியில் பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகளான அகதிகளிடம் இன்று காலை திடீர் மோதல் ஏற்பட்டது. பெரும் தள்ளுமுள்ளு நடைபெற்றது. இந்த மோதலில் இலங்கை தமிழரான ஸ்ரீஜெயந்த் என்ற கைதி கடுமையாக காயமடைந்தார்.
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அகதிகள் சிறை முகாமில் நடைபெற்ற இந்த மோதலுக்கான காரணம் குறித்து சிறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications