திருச்சி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... பரபரப்பு
திருச்சி: திருச்சி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, காலை 10 மணி அளவில் வந்த தொலைபேசி அழைப்பில், திருச்சி ரயில்வே சந்திப்பில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, திருச்சி ரயில்வே சந்திப்பு மற்றும் அதன் அருகில் உள்ள நிர்வாக அலுவலகங்கள், காவல்துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு, சோதனை நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மோப்ப நாய் மற்றும் நவீன கருவிகளின் உதவியுடன், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடைபெற்றது. ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள், அவர்களது உடைமைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. ரயில்களிலும், சோதனை மேற்கொள்ளப்பட்டதால் பயணிகள் பதற்றமடைந்தனர்.
இது வெறும் மிரட்டல்தான் என்று கூறிய திருச்சி கோட்ட ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் ஆனி விஜயா, பொதுமக்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை என, கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications