வீடு புகுந்து பலாத்காரம் செய்த இன்ஸ்பெக்டர்.. நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்த திருச்சி பெண்!
திருச்சி: திருச்சியில், நள்ளிரவில் தனது வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் ஒரு இன்ஸ்பெக்டர் என்று கூறி பரபரப்பைக் கிளப்பிய பெண், இன்று திருச்சியில் பெண் நீதிபதி முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
திருச்சி கே.கே.நகர் இந்தியன் வங்கி காலனி பகுதியைச் சேர்ந்தவர் பரிமளா. (35). சில மாதங்களுக்கு முன்பு இவர் திருச்சியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய முருகேசன் (50) என்பவர் மீது புகார் கொடுத்திருந்தார். இதை தொடர்ந்து முருகேசன் நெல்லை மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி நள்ளிரவு வீட்டில் தான் தனியாக இருந்தபோது முருகேசன் வீடு புகுந்து வந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக போலீஸில் புகார் கொடுத்தார் பரிமளா.
இது குறித்து கண்டோன்மெண்ட் மகளிர் போலீசார் இன்ஸ்பெக்டர் முருகேசன் மீது 2 பிரிவுகள் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முருகேசன் முன்ஜாமீன் பெற்றார். அவர் தினமும் கண்டோன்மெண்ட் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே இன்ஸ்பெக்டர் முருகேசனை அவர் ஜாமீன் பெறும் வரை கைது செய்யாமல் போலீசார் காப்பாற்றுவதாகவும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரிமளா குற்றம் சாட்டினார். மேலும் நேற்று திருச்சி காவல்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதத்திலும் குதித்தார். அவரை பெண் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இன்று காலை திருச்சி 3வது பெருநகர கோர்ட்டில் நீதிபதி அல்லி முன்பு ஆஜரானார் பரிமளா. அவரிடம் 2 மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்தார். நீதிமன்றக் கதவு பூட்டப்பட்டு இந்த வாக்குமூலம் பெறப்பட்டது. வீடியோவிலும் அது பதிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications