Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு தினகரனையே உங்களால் சமாளிக்க முடியலையே.. தினகரன் நக்கல்!

குடும்ப ஆட்சி நடப்பது அதிமுகவிலா, அமமுகவிலா என்று தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கோவை அமமுக பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் பேச்சு-வீடியோ

    கோவை: ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலாவினால் தான் இந்த ஆட்சி தொடர்ந்து வருவதாக தெரிவித்த டிடிவி தினகரன், குடும்ப ஆட்சி நடப்பது அதிமுகவிலா, அமமுகவிலா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

    கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற அமமுக பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் மேடையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது-

    கொங்கு மண்டலம் என்பது அதிமுகவின் கோட்டை, அதனால் தான் அதிக அமைச்சர்களை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு அவரது மனைவி ஜானகியால் ஆட்சியை காப்பாற்ற முடியவில்லை. ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலாவினால் தான் இந்த ஆட்சி தொடர்ந்து வருகிறது.

    TTV criticised the State Govt. in Kovai

    எடப்பாடி பழனிசாமியை ஜெயலலிதா கூட அமைச்சராகதான் ஆக்கினார், ஆனால் முதலமைச்சராக்கிய சசிகலாவை கட்சியை விட்டு நீக்கினார். ஆயிரம் தினகரன் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று முதலமைச்சர் பேசுகிறார், இந்த ஒரு தினகரனையே ஆர்.கே.நகரில் அவரால் எதிர்கொள்ள முடியவில்லை.

    மடியில் கனம் இருந்ததால் டெல்லிக்கு பயந்து கொண்டு என்னை கட்சியில் இருந்து நீக்கினார்கள். 2014 ல் ஜெயலலிதா கூட்டணிக்கு வராததால் பாஜக பழி வாங்குகிறது. என்னை கட்சியில் இருந்து வெளியேற சொன்னவர்கள், அரசியலில் இருந்தே வெளியாறுவார்கள்.

    இவ்வாறு டிடிவி தினகரன் உரையாற்றினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+