ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ்க்கு ஆதரவு அளித்து தினகரன் அமைச்சராக வேண்டும்: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு அளித்து தினகரன் அமைச்சர் ஆக வேண்டும் என்று ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
கோவை : அதிமுகவின் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு அளித்து அமைச்சரவையில் இடம் பெற்று தினகரன் அமைச்சர் ஆக வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த பாஜக மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே இன்று கோவையில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வந்து இருந்தார். அப்போது அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசுகையில், தற்போது மத்தியில் ஆளும் பாஜக கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வரும் அதிமுக வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும், டிடிவி தினகரன் தனியாகப் பிரிந்து இருப்பது தனக்கு வருத்தம் அளிப்பதாகவும், உடனடியாக கட்சிப் பூசலைத் தவிர்த்து, ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவருடனும் சேர்ந்து அதிமுக அணிக்கு ஆதரவளித்து, அதன் மூலம் அமைச்சரவையில் அமைச்சர் ஆக வேண்டும் என்பது தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications