மருத்துவமனையில் இருக்கும் நடராஜனுடன் டி.டி.வி தினகரன் சந்திப்பு: அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து
தனது பயணத்திட்டங்களை ரத்து செய்த டி.டி.வி தினகரன், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் ம.நடராஜனைச் சந்தித்தார்.
Recommended Video

சென்னை : திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் கணவர் நடராஜனை ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரன் நேரில் சந்தித்தார்.
சசிகலா கணவர் ம.நடராஜனுக்கு இன்று அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, அவர் சென்னையில் உள்ள குளோபல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடராசனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நடராசனை டி.டி.வி தினகரன் நேரில் சென்று சந்தித்தார்.
இதனால் திருச்சி செல்வதாக இருந்த தினகரன் இன்றைய திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நாளை தினகரன் கலந்துகொள்வதாக இருந்த நிகழ்ச்சியும் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடராசனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா தனது கணவரை சந்திக்க அனுமதி கேட்டு பரோலுக்கு விண்ணப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications