திஹார் டு டிவிட்டர்.. !
திஹார் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு முதல் முறையாக இன்று டிவீட்டியுள்ளார் டிடிவி.தினகரன்.
சென்னை: திஹார் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு முதல் முறையாக இன்று டிவீட்டியுள்ளார் டிடிவி.தினகரன். மீண்டும் டிவிட்டர் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி என டிடிவி தினகரன் கூறியுள்ளார்
இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுத்த புகாரில் டிடிவி தினகரன் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு மாத சிறைவாசத்துக்குப் பிறகு தினகரனுக்கு டெல்லி மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து சென்னை வந்த அவர் சசிகலாவை சந்திப்பதற்காக பெங்களூரூ பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்றார். இதைத்தொடர்ந்து கட்சியில் ஏற்பட்ட குழப்பங்களால் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள தினகரன் கிடைத்த கேப்பில் டிவிட்டர் பக்கத்தில் தலை காண்பித்துள்ளார்.
அனைவருக்கும் வணக்கம். மீண்டும் உங்களை இந்த தளத்தில் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) June 6, 2017
தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, அனைவருக்கும் வணக்கம். மீண்டும் உங்களை இந்த தளத்தில் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.