Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மூத்த அமைச்சரின் இழிவான பேச்சு.. பெண்களை அவமதிக்கும் ஆட்சியாளர்கள் நீடிக்கமுடியாது.. தினகரன் ஆவேசம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : திமுக மூத்த அமைச்சர்கள் தாய்மார்களையும், மாணவிகளையும் இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து பேசிவருவது கண்டிக்கத்தக்கது, பெண்களை அவமதிக்கும் திமுக அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ttv dinakaran condemns durai murugan speech about government schemes

சமீபத்தில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்த கூட்டம் ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகன், கல்லூரி மாணவியருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை திட்டம் பற்றிப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "உங்கள் பெண் கல்லூரியில் சேர்ந்தால் அவருக்கும் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம். பஸ்ஸுக்கு அம்மாவிடம் போய் கேட்காதே. நீ பசங்களோட சினிமாவுக்கு போனா அங்க பணம் கேட்காதே. ஒரு செல்போன் வாங்கி வச்சுக்கோ. அதுல நைசாக பேசு.. என்ன வேணும்னாலும் பண்ணு என்று ஆயிரம் கொடுக்கிறோம்" என்று பேசியுள்ளார்.

மூத்த அமைச்சர் துரைமுருகன், அரசின் உதவித்தொகை திட்டம் பற்றிப் பேசும்போது பெண்களை இழிவுபடுத்துவது போல் பேசியதற்கு சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றன. முன்னதாக, இலவச பேருந்து பயணம் பற்றி அமைச்சர் பொன்முடி பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இதுதொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ttv dinakaran condemns durai murugan speech about government schemes

டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "திமுக மூத்த அமைச்சர்கள் தாய்மார்களையும், மாணவிகளையும் இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து பேசிவருவது கண்டிக்கத்தக்கது. 1000 ரூபாய் உதவி பெறும் மாணவிகள், தாய்மார்களை இழிவுபடுத்தும் வகையில் பொதுநிகழ்ச்சியில் மூத்த அமைச்சர் துரைமுருகன் பேசியதற்கு பல்வேறு பிரிவினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மக்கள் வரிப்பணத்தில் செலவு செய்யும் அரசு அவர்களையே இழிவுபடுத்துவது எந்தவகையில் நியாயம்?

ttv dinakaran condemns durai murugan speech about government schemes

இலவசங்கள் தர வேண்டும் என்று பொதுமக்கள் யாரும் இவர்களிடம் கேட்கவில்லை. ஆட்சியைப் பிடிப்பதற்கு தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதைத்தான் நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர். பெண்களை இழிவுபடுத்தும் சமூகம் மட்டுமல்ல, பெண்களை அவமதிக்கும் ஆட்சியாளர்களும் நீடித்திருந்ததாக சரித்திரம் இல்லை. பெண்களை அவமதிக்கும் தி.மு.க அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை!" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+