வாக்காளர்களுக்கு பணம் தராமல் 'கடன்' வைத்தேனா? சர்ச்சைக்கு டிடிவி தினகரன் விளக்கம்
கடன் சொல்லி வாக்காளர்களிடம் ஓட்டு வாங்க வேண்டிய நிலை இல்லை என்று டி.டி.வி தினகரன் தெரிவித்து உள்ளார்.
சென்னை : வாக்காளர்களிடம் ஓட்டு போட்ட பின்பு பணம் தருவதாக கடன் சொல்ல வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்று டி.டி.வி தினகரன் தெரிவித்து உள்ளார்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. வாக்குப்பதிவு நேரம் மாலை ஐந்து மணிக்கு முடிவடைந்தும் பல வாக்காளர்கள் வரிசையில் ஏழு மணி வரை நின்று வாக்களித்துவிட்டு சென்றனர். வாக்களிக்கவில்லை என்றால் கொடுத்த பணத்தை திரும்ப கேட்பார்கள் என்கிற அச்சத்திலேயே வாக்களித்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

காலை வாக்குப்பதிவின் போதே பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜன், தினகரன் அணியினர் 20 ரூபாய் நோட்டை கொடுத்துவிட்டு ஓட்டு போட்டுவிட்டு வந்து சீரியல் எண் சொல்லி பணம் வாங்கிக்கொள்ள பலருக்கு டோக்கன் அளிக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து இன்று மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் டி.டி.வி தினகரன் பதிலளித்தார். அப்போது, டோக்கன் கொடுத்து, தொகுதி மக்களிடம் கடன் சொல்லி ஓட்டு வாங்க வேண்டிய நிலை எங்களுக்கு இல்லை.
என்னை நம்பி இருக்கும் மக்களிடம் நான் ஏன் கடன் சொல்ல வேண்டும். ஆனால், இப்படி யாராவது ஓட்டு கேட்பார்களா? இதை எல்லாம் ஒரு குற்றச்சாட்டாக வைப்பதை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும்,விரைவில் மக்கள் விரோத ஆட்சியை தமிழகத்தில் இருந்து அகற்ற மக்கள் எனக்கு வாக்களித்து இருக்கிறார்கள். அடக்குமுறையை கையாளும் அரசு விரைவில் மண்ணைக் கவ்வும். அது வாக்கு எண்ணிக்கையின் போது அனைவருக்கும் தெரிய வரும் என்றும் தினகரன் குறிப்பிட்டு உள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications