டிடிவி தினகரன் அமைப்பின் பெயர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
டிடிவி தினகரன் தனது புதிய அமைப்பிற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரை சூட்டியுள்ளார்.
Recommended Video

மதுரை: மேலூர் பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் தனது புதிய அமைப்பிற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரை சூட்டியுள்ளார்.
ஆா்.கே.நகா் சட்டமன்ற உறுப்பினா் டிடிவி தினகரன் மதுரை மேலூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தனது புதிய அமைப்பின் பெயா் மற்றும் அமைப்பின் கொடியை இன்று அறிவித்தார்.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்று பெயரை அறிவித்த டிடிவி தினகரன் அமைப்பின் கொடியையும் அறிமுகம் செய்தார். கறுப்பு வெள்ளை சிவப்பு நிற கொடியில் ஜெயலலிதாவின் படம் இடம் பெற்றுள்ளது.

தினகரன் பிரம்மாண்டம்
மேலூரில் லட்சக்கணக்கான தொண்டர்களின் ஆரவாரத்திற்கு இடையே மேடையேறினார் டிடிவி தினகரன். பலரும் மேடையில் வந்து கை குலுக்கி அறிமுகம் செய்து கொண்டனர். செந்தில் பாலாஜி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

வறுத்தெடுத்த ஆதரவாளர்கள்
தினகரன் பேசத் தொடங்கும் முன்பாக பேசிய ஆதரவாளர்கள் அனைவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஒ. பன்னீர் செல்வத்தை கடுமையாக திட்டினர். துரோகிகள் கூட்டத்தை ஒழிக்கவே சிங்கத்தலைவன் வந்துள்ளான் என்று பேசினார். டிடிவி தினகரன் வாழ்த்தும் வகையில் பாடல்களையும் ஒலிபரப்பினார்கள்.

நல்ல நேரம் பார்த்த டிடிவி தினகரன்
டிடிவி தினகரன் பேசத் தொடங்கிய போது புதன் ஓரை தொடங்கியிருந்தது. கடந்த சில மாதங்களாக அமைப்பின் பெயர், கொடி எதுவும் இல்லாமல் செயல்பட்டோம். இன்று முதல் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற அமைப்பின் கீழ் செயல்படுவோம் என்று அறிவித்தார். சசிகலாவின் ஆசியுடன், வாழ்த்துக்களுடன் பெயரை அறிவிப்பதாக கூறினார் தினகரன்.

சட்டசபை தேர்தல்
கூட்டுறவு தேர்தல், உள்ளாட்சித்தேர்தல், சட்டசபைத் தேர்தல், லோக்சபா தேர்தல் என எந்த தேர்தலாக இருந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற பெயரின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று கூறினார். அமைப்பின் சின்னம் கொடி தேர்வு செய்யப்பட்ட விதத்தையும் கூறி மேடையில் கொடியை வடிவமைத்த வட்டச்செயலாளருக்கு பாராட்டு தெரிவித்தார் டிடிவி தினகரன்.












Click it and Unblock the Notifications