அரசியலுக்கு குட்பை சொல்லவும் தயார்.. டிடிவி தினகரன் திடீர் பேச்சால் பரபரப்பு
ஆர்கே நகர் தேர்தலுக்குப் பின் அதிமுக அணிகள் இணைந்தால் அதனை வரவேற்பேன் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை: ஆர்கே நகர் இடைத் தேர்தலுக்குப் பின்னர் அதிமுக அணிகள் இணைந்தால் அதனை வரவேற்பதாகவும் என்னை கிளம்பி போகச் சொன்னால் அரசியலைவிட்டு ஒதுங்கும் பற்றற்ற நிலையில்தான் தாம் இருப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
முதல்வர் நாற்காலியை குறித்து சசிகலாவும் அவரது உறவினர்களும் நீண்டகாலமாக காத்திருக்கின்றனர். 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, சசிகலா குடும்பத்தினரின் சதி செயல்களை பகிரங்கப்படுத்தினார்.
ஆட்சியை கைப்பற்ற சசிகலா குடும்பத்தினர் சதித் திட்டம் தீட்டியதால் கூண்டோடு அவர்களை கட்சியை விட்டு நீக்கியதுடன் பல வழக்குகளில் சிறையிலடைத்தார். ஜெயலலிதா மறைந்த உடனேயே அதிமுகவை சசிகலா கைப்பற்றினார். ஆட்சியையும் அவர் கைப்பற்ற நினைத்தார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

துணைப் பொதுச்செயலராக....
இதனால் சசிகலாவின் முதல்வர் கனவு தவிடுபொடியானது. சிறைக்குப் போகும் முன்னர் டிடிவி தினகரனை அதிமுகவின் துணை பொதுச்செயலராக நியமித்தார் சசிகலா. இதையடுத்து தினகரனும் கட்சி, ஆட்சி இரண்டையும் கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்.

முதல்வர் நாற்காலி ஆசை
இதன் ஒருபகுதியாகவே ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் தினகரனே போட்டியிடுகிறார். இத்தொகுதியில் தினகரன் வென்றால் நிச்சயம் முதல்வர் நாற்காலியில் அமர முயற்சிப்பார் என்றே கூறப்படுகிறது. ஆனால் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவாளர்களும் இதற்கு இடம் அளிப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதிரடி அறிவிப்பு
இதனிடையே புதிய தலைமுறை டிவியில் அக்னி பரீட்சை நிகழ்ச்சிக்கு பேட்டியளித்த தினகரன் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தினகரன் கூறியுள்ளதாவது:

இரு அணிகள் இணைந்தால் வரவேற்பு
ஆர்கே நகர் இடைத் தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவின் இரு அணிகளும் கை கோர்த்தால் அதனை வரவேற்க தயாராக இருக்கிறேன். அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து நாங்கள் ஆட்சியைப் பார்த்து கொள்கிறோம். நீங்கள் சென்றுவாருங்கள் என கூறிவிட்டால் உடனே பை சொல்லிவிட்டு கிளம்பிவிடுவேன்.

பற்றற்ற நிலையில்....
அப்படியான ஒரு பற்றற்ற நிலையில்தான் நான் இருக்கிறேன். இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார். முதல்வர் நாற்காலி கனவில் இருக்கும் தினகரன் தாம் பற்றற்ற நிலையில்தான் இருக்கிறேன் என கூறியிருப்பதை அதிமுகவினரே நமுட்டு சிரிப்புடன்தான் பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications