இரட்டை இலை: "ஸ்லீப்பர் செல்" சு.சுவாமியுடனான பேச்சுக்குப் பின் திட நம்பிக்கையில் தினகரன்!
சுப்பிரமணியன் சுவாமி கொடுத்த உத்தரவாதத்தின் அடிப்படையில்தான் தமக்கு இரட்டை இலை கிடைக்கும் என திடநம்பிக்கையில் இருக்கிறாராம் டிடிவி தினகரன்.
சென்னை: தம்முடைய ஸ்லீப்பர் செல் சுப்பிரமணியன் சுவாமியுடன் நேற்று இரவு பேசியதைத் தொடர்ந்தே நிச்சயம் இரட்டை இலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறாராம் டிடிவி தினகரன்.
தமிழகமே பெரும் எதிர்பார்ப்புடன் இருப்பது ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலைத்தான்... அதுவும் தேர்தல் முடிவுகளைவிட இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிடப் போகிறார்கள் என்ற நாளைய க்ளைமாக்ஸ்தான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்லீப்பர் செல்கள்
ஓபிஎஸ் அதிமுகவும் சசிகலா அதிமுகவும் படுதீவிரமான லாபிகளில் இறங்கியுள்ளன. சசிகலா அதிமுகவின் தினகரன், காஞ்சி சங்கரமடம், சுப்பிரமணியன் சுவாமி என பலரையும் ஸ்லீப்பர் செல்களைப் போல களமிறக்கி லாபியில் ஈடுபட்டு வருகிறார்.

சு.சுவாமியுடன் பேச்சு
இந்த நிலையில் நேற்று இரவு சுப்பிரமணியன் சுவாமியுடன் தினகரன் பேசியுள்ளார். அப்போது சுப்பிரமணியன் சுவாமி மிகவும் நம்பிக்கையோடு இருங்கள் என கூறியிருக்கிறார்.

திட்டவட்ட பேச்சு
இந்த உத்தரவாதத்தைத் தொடர்ந்தே இன்று நான் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவேன்; இரட்டலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும் என ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் பதற்றத்துடன் திட்டவட்டமாக கூறினாராம் தினகரன்.

இரட்டை இலை இல்லையெனில்?
அதே நேரத்தில் இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டாலும் தினகரன் போட்டியிடுவாரா? என்கிற சந்தேகமும் சசிகலா அணியில் எழுந்துள்ளது. இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலையில் தினகரன் மற்றொரு வேட்பாளரை அறிவிக்கவும் சாத்தியம் இருக்கிறதாம்.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications