ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் அமோக வெற்றி.. பேரா. ராஜநாயகத்தின் சர்வேயில் பரபர தகவல்கள்
ஆர்.கே.நகரில் இன்று வாக்களிப்பதாக இருந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என கேட்கப்பட்டதற்கு, டி.டி.வி.தினகரனுக்கு என 35.5 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
Recommended Video
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளதாக பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு மைய அமைப்பின் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது
ஆர்.கே.நகரில் வரும் 21ம் தேதி சட்டசபை இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், சுயேட்சையாக டிடிவி தினகரன் ஆகியோர் நடுவே கடும் போட்டி நிலவுகிறது.
இதுகுறித்த ஒரு சுவாரசிய கருத்துக்கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளன.
ராஜநாயகம் டீம்
பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு மைய அமைப்பின் கருத்து கணிப்பில் கிடைத்த விவரங்கள் பற்றி, இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். ராஜநாயகம் கூறியதாவது: டி.டி.வி.தினகரனுக்கு இந்த தேர்ததில் ஒதுக்கப்பட்டு இருக்கும் பிரஷர் குக்கர் சின்னத்தை அத்தொகுதியிலுள்ள 91.6 சதவீதம் மக்கள் எளிதாக அடையாளம் காண்கிறார்கள்.
குக்கர் சின்னம் பிரபலம்
அதேநேரம், இரட்டை இலை சின்னம் 81.1 சதவீதம் பேரால் அடையாளம் காணப்பட்டு உள்ளது. பிரஷர் குக்கர் சின்னம் அறிவிக்கப்பட்ட ஓரிரு நாள்களிலேயே ஏறத்தாழ தொகுதி முழுவதும் அது குறித்த தகவல் நன்றாக சென்று சேர்ந்துவிட்டது.
தினகரன் தகுதிகள்
அறிவாற்றல், துணிச்சல், நிர்வாக திறன், துடிப்பான செயல்பாடு, ஊடகச் சிறப்பு, வெகுஜன உறவு, சமூக அக்கறை ஆகிய மதிப்பீட்டில் டி.டி.வி.தினகரன் முன்னிலை வகிக்கிறார். இதுதான் மக்கள் அவரை விரும்ப காரணம் என கருத்து கணிப்பில் தெரியவந்தது.
ஆட்சி எப்படி?
அதிமுக ஆட்சி மோசம் என்று 73.3 சதவீதமும், சிறப்பு என 4.5 சதவீதமும், சொல்லிக் கொள்ளும்படி இல்லை என 22.1 சதவீதம் வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர். அதே போல் மத்தியிலுள்ள பாஜக ஆட்சி மோசம் என்று 85.6 சதவீதம் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தினகரன் அமோகம்
ஆர்.கே.நகரில் இன்று வாக்களிப்பதாக இருந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என கேட்கப்பட்டதற்கு, டி.டி.வி.தினகரனுக்கு 35.5 சதவீதமும், மருது கணேஷ்க்கு 28.5 சதவீதமும், மதுசூதனனுக்கு 21.3 சதவீதமும், பா.ஜ.க., வேட்பாளர் கரு.நாகராஜனுக்கு 1.5 சதவீதமும் வாக்குகள் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இன்னும் இருக்கு
தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் இருக்கும் நிலையில், தினகரன் தரப்பு இன்னும் அதிக மக்களை 'ஈர்க்க' முடியும் என்று எதிர்பார்க்கலாம். இதை ஆளும் கட்சி விரும்பாது. எனவே தேர்தலுக்கு முன்பு இன்னும் என்ன கூத்துகள் நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது.