இடைத்தேர்தலில் 'ஜெ' பெற்ற வாக்குகளை பெறுகிறாரா டிடிவி?.. இருவருக்கும் சமமாக ஆதரவு அளித்த மக்கள்!
2015 இடைத்தேர்தலில் இரண்டாம் சுற்று முடிவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெற்ற வாக்குகளுக்கு சமமான வாக்குகளை டிடிவி தினகரன் பெற்று இருக்கிறார்.
Recommended Video

சென்னை: 2015 இடைத்தேர்தலில் இரண்டாம் சுற்று முடிவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெற்ற வாக்குகளுக்கு சமமான வாக்குகளை டிடிவி தினகரன் பெற்று இருக்கிறார். மேலும் 2015 தேர்தலில் இருமுனை போட்டி மட்டுமே நிலவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆர்.கே நகரில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் அபாரமாக முன்னிலை வகிக்கிறார்.

தொடக்கத்தில் இருந்து முன்னிலை வகிக்கும் தினகரன் இப்போது 10,421 வாக்குகள் பெற்று இருக்கிறார். 2015ல் ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் இரண்டாம் கட்ட முடிவில் ஜெயலலிதா இதே அளவு வாக்கு எண்ணிக்கைதான் பெற்று இருந்தார்.
அப்போது 17 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முதல் சுற்றிலேயே ஜெயலலிதா முன்னிலை வகித்தார். இரண்டாம் சுற்று முடிவில் அவர் 9,562 வாக்குகள் முன்னிலை வகித்தார். தற்போது டிடிவி தினகரன் இரண்டாம் சுற்று முடிவில் 6000 வாக்குகள் வரை முன்னிலை வகிக்கிறார்.
ஆனால் அப்போது ஜெயலலிதாவை எதிர்த்து சிபிஐ கட்சி மட்டுமே போட்டியிட்டது. இந்த முறை மும்முனை போட்டி நிலவுகிறது. மும்முனை போட்டி நிலவும் போதே டிடிவி 10,421 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். எனவே 19 சுற்றுகள் முடிவில் தினகரன், ஜெயலலிதா எடுத்த 1,60,921 வாக்குகளை நெருங்க அதிகம் வாய்ப்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications