தூத்துக்குடியை தொழில் நகரமாக்குவேன்: திமுக வேட்பாளர் ஜெகன்
தூத்துக்குடி: தூத்துக்குடியை தொழில் நகரமாக்க பாடுபடுவேன் என்று தூத்துக்குடி லோக்சபா தொகுதியின் திமுக வேட்பாளர் ஜெகன் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் களம் பரபரப்பாக உள்ள நிலையில் அதிமுக மற்றும் திமுக தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தங்களது வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமியின் மகன் ஜெகன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த வேட்பாளர் ஜெகன் கூறியதாவது:
தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் தொழில் வளம் அதிகரிக்க பாடுபடுவேன் அதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரித்து படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்க பாடுபடுவேன் மேலும் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த பாடுபடுவேன் என்றார்.
அப்போது அவருடன் தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.