Breaking News: 13 அப்பாவிகளை பலி கொண்ட துப்பாக்கிச் சூடு- தூத்துக்குடி ஆட்சியர், எஸ்பி மாற்றம்!
12 பேர் பலியானதைக் கண்டித்து இன்று தூத்துக்குடியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
Tamilnadu
oi-Madhivanan
By Mathi
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களாக கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை பலி கொண்டது மாவட்ட நிர்வாகம். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், எஸ்.பி. மோகன் ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர். புதிய மாவட்ட ஆட்சியராக நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி எஸ்.பி. மோகனுக்கு பதில் முரளி ரம்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2 நாட்களில் தூத்துக்குடியில் பொதுமக்கள் மீதான போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக தூத்துக்குடி அரசு மருத்துவமனை அருகே இன்று காலை போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர்.
நடப்பு செய்திகளை உடனுக்குடன் இப்பக்கத்தில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்
May 23, 2018, 9:59 pm IST
ஆளுநருடனான முதல்வர் எடப்பாடி, ஓபிஎஸ் சந்திப்பு நிறைவு
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 5,000 போலீசார் குவிப்பு
Security tightened in #Thoothukudi after eleven people were killed yesterday in police firing during protests against Sterlite industries. Section 144(prohibits assembly of more than 4 people in an area) has been imposed in the city. #TamilNadu#SterliteProtestpic.twitter.com/cyOUFrxCGC