எல்லை மீறிய குடிகாரர்கள் தொல்லை: கோவிலாக மாறிய பயணிகள் நிழற்குடை
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே குடிகாரர்கள் தொல்லை தாங்க முடியாமல் பயணிகள் நிழற்குடையை கோவிலாக பொதுமக்கள் மாற்றியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுகிராமம் மெயின் ரோட்டில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் புதுக்கிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் மழையிலும், வெயிலிலும் நனைந்து, காய்ந்து வந்தனர். இதையடுத்து நகராட்சி சார்பில் அப்பகுதியில் நிழற்குடை அமைக்கப்பட்டது.

கோவில்பட்டியில் இருந்து வடஇழுப்பையூரணி கிராமப் பகுதிக்கு செல்லும் பேருந்துகள் இந்த நிறுத்தத்தில் நின்று செல்கின்றன. இந்நிலையில் இந்த பயணிகள் நிழற்குடையில் இரவு நேரத்தில் சிலர் கும்பலாக அமர்ந்து மது குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே விட்டு செல்வதும், ஒரு சில நாட்களில் போதை தலைக்கேறிய சிலர் பயணிகள் நிழற்குடை இருக்கையில் படுத்துக் கிடப்பதும் தொடர் கதையாக இருந்து வந்தது.
மேலும் பகல் நேரத்திலும் இங்கு குடிகாரர்கள் அமர்ந்து குடிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது. இதனால் இளம்பெண்களும், முதியவர்களும், குழந்தைகளும் இங்கு நிற்பதற்கு பயந்து வந்தனர்.
இதையடுத்து குடிகாரர்களின் அட்டகாசத்தை ஒடுக்க பொதுமக்கள் முடிவெடுத்தனர். இதன்படி பயணிகள் நிழற்குடை சுவர்களில் குழல் ஊதும் கிருஷ்ணர், வனத்தில் கோமாதாவுடன் (பசுக்களுடன்) உலா செல்லும் கிருஷ்ணர் உள்ளிட்ட டிஜிட்டல் பேனர்களை ஒட்டினர். மேலும் நிழற்குடை முன்பு ஒரு கம்பத்தில் அணையா தீபவிளக்கும், மற்றொரு கம்பத்தில் புல்லாங்குழலையும், அருகில் துளசி செடியையும் அதிரடியாக வைத்தனர்.
கம்பத்தில் உள்ள விளக்கில் 24 மணிநேரமும் தீபம் எரிந்து கொண்டிருக்கிறது. கிருஷ்ணர் கோவில் போல் இருக்கும் இந்த நிழற்குடையில் காலை, மாலையும் சிறப்பு பூஜையும் நடக்கிறது. இதனால் குடிமகன்கள் அங்கு வருவதை தவிர்த்துவிட்டனர். ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்ததால் மக்கள் நிம்மதியாக பழையபடி நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ஷாக் ட்ரீட்மென்ட்டை மற்ற பகுதிகளிலும் பயன்படுத்தலமா என பொதுமக்கள் யோசிக்க தொடங்கியுள்ளனர்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications