குரங்கு போல மாடி விட்டு மாடி தாவிய இளைஞர்.. மடக்கிப் பிடித்த போலீஸ்.. விசாரணையில் மெளனம்
தூத்துக்குடி: கோவில்பட்டியில் இரவு நேரத்தில் குரங்கு போல் மாடிக்கு மாடி தாவி ஏறி திருட முயன்ற மர்ம மனிதரை போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மட்டுமல்லாது இரவு நேரத்திலும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்தன. இந்த நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் கோவில்பட்டி ஜோதிநகர் விநாயகர் கோவில் அருகே உள்ள வீட்டு மாடியில் மர்ம நபர் ஒருவர் ஏறி நின்றார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் கூச்சலிட்டனர். பொது மக்கள் பார்த்து விட்டதை அறிந்த அந்த நபர் அருகில் இருந்த வீடுகளில் மாடியில் குரங்கு போல் தாவி தாவி ஓடினார்.
இதனைத் பார்த்த அப்பகுதி இளைஞர்கள் மாடியில் தாவி ஓடியவரை துரத்தி பிடிக்க முயன்றனர். இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்களும் சேர்ந்து அவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். போலீஸ் விசாரணை செய்த போது அந்த மர்ம நபர் எந்த வித பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்தார். மேலும் அவர் வட மாநிலத்தை சேர்ந்தவரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர் எந்த ஊரை சேர்ந்தவர், பெயர் என்ன என்று எதுவும் கூறாமல் மவுனமாக இருந்து வருகிறார். அவரை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்தனர். கோவில்பட்டி நகரில் இதுவரை நடந்த திருட்டு சம்பவங்களில் அவருக்கு தொடர்பு உண்டா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. நள்ளிரவில் வீட்டு மாடியில் குரங்கு போல தாவி ஓடிய வாலிபரால் அந்த பகுதி பெண்கள் பீதியடைந்துள்ளனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications