"டார்ச்சர்" செய்கிறார் எஸ்.பி.. கோர்ட்டில் குமுறிய இன்ஸ்பெக்டர்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட எஸ்பி தொடர்ந்து தன்னை டார்ச்சர் செய்து வருவதாக கூறி இன்ஸ்பெக்டர் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருப்பவர் செல்வம். இவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு மனு செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி சிப்காட்டில் போலீஸ் இனஸ்பெக்டராக பணியாற்றினேன். கடந்த ஏப்ரல் 14ம் தேதி ரூ.40 லட்சம் மதிப்பிலான உர மூட்டைகள் திருடு போனது. உடனடியாக வழக்கு பதிவு செய்தேன். மறுநாள் தூத்துக்குடி எஸ்பி மீதான நீதிமன்ற அவதூறு வழக்கில் ஆஜராக மதுரை ஐகோர்ட் கிளைக்கு சென்று விட்டேன்.
ஆனால் பணியை முறையாக செய்யவிலலை என கூறி எஸ்பி அஸ்வின் கோட்னீஸ் மைக்கில் என்னை திட்டினார். நான் அவரது போனில் ஐகோர்ட்டுக்கு வந்த விபரத்தை தெரிவித்தேன். அப்போதும் என்னை திட்டினார். பின்னர் என்னை நாசரேத் ஸ்டேஷனுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். அங்கு போய் உடனடியாக பணியில் சேர்ந்து விட்டேன்.
ஆனால் காரணமே இல்லாமல் மெமொ கொடுத்தார். தட்டம்பாறை போலீஸ் ஸ்டேஷனில் ஓருநாள் வேலை பார்த்தேன். அங்கு நடந்த கொலையில் 4 பேர் மீது வழக்கு பதிந்தேன். ஆனால் எஸ்பி தலையிட்டு நான் பதிவு செய்த வழக்கை அப்படியே மாற்றி விட்டார். தொடர்ந்து உள் நோக்கத்துடன் டார்ச்சர் கொடுத்து வந்தார்.
இதனால் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது. உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளேன். இதற்கிடையே நாசரேத்துக்கு மாறறியதற்கு ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றேன். ஆனால் என்னை சிப்காட் ஸ்டேஷனில் பொறுப்பு ஏற்க அனுமதிக்கவில்லை.
இதிலிருந்து அவரது உள்நோக்கம தெரிகிறது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications