மதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவிய ஜோயலுக்கு இளைஞர் அணி துணை செயலர் பதவி!
சென்னை: மதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவிய தூத்துக்குடி ஜோயலுக்கு இளைஞர் அணி துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, மதுரை மாவட்ட மதிமுக செயலாலர்களாக இருந்த தில்லை செல்வம், எஸ்.பெருமாள், ஜோயல், சரவணன் உள்ளிட்டோர் அண்மையில் திமுகவில் இணைந்திருந்தனர்.

சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் அனைவரு மதிமுகவில் இணைந்தனர். இவர்களுக்கு தற்போது திமுகவில் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இது குறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
திமுக இளைஞர் அணி துணை செயலாளராக ஜோயல்,
தீர்மானக் குழு உறுப்பினராக ஆ.சரவணன்,
கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளராக தில்லை செல்வம்,
நெசவாளர் அணி செயலாளராக எஸ்.பெருமாள்,
மருத்துவர் அணி துணை தலைவராக டாக்டர் சரவணன்
ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
இவ்வாறு திமுக தலைமை நிலைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications