பீகார் முன்னணி நிலவரம்... தெளிவாக செய்தி சொன்ன சிஎன்என்-ஐபிஎன்.. குழப்பிய பிற டிவி சேனல்கள்
சென்னை: பீகார் சட்டசபைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின்போது முன்னணி நிலவரத்தை வெளியிடுவதில் டிவி சேனல்கள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டன. குறிப்பாக ஆங்கிலச் சேனல்கள். இதனால் முதலில் பாஜக கூட்டணி பெரிய வெற்றி பெறுவதாக செய்திகள் வெளியாகி விட்டன. ஆனால் உண்மையில் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணியே முன்னிலை வகித்து வருகிறது.
காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஒவ்வொரு சேனலும் ஒவ்வொரு விதமாக முடிவை ஒளிபரப்பத் தொடங்கி விட்டன. ஏதோ எக்ஸிட் போல் முடிவு போல இது காணப்பட்டது.

என்டிடிவி பாஜக பெரும்பான்மையை நோக்கிப் போவது போல காட்டியது. நியூஸ் எக்ஸ் சானலோ ஐக்கிய ஜனதாதளம் முன்னணியில் இருப்பதாக கூறியது.
சரியான சொன்ன சிஎன்என் ஐபிஎன்
ஆனால் சிஎன்என் ஐபிஎன் டிவிதான் சரியான முடிவைக் கூறி வந்தது. அது நிதீஷ் குமார் தலைமையிலான கூட்டணி முன்னணி வகிப்பதாகவும்,. அதையொட்டி பாஜக வந்து கொண்டிருப்பதாகவும் கூறியது. இந்த டிவிதான் சற்று தெளிவான முறையில் முன்னணி நிலவரத்தைக் கூறி வந்தது.
இந்த டிவி நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும், பிரதமர் மோடிக்கும் நெருக்கமான நிறுவனமாக இருந்தபோதும் சரியான முறையில் முடிவைச் சொல்லி "மீடியா" என்ற பெயருக்கேற்ப பொறுப்புடன் நடந்து கொண்டது.
சிஎன்என் மட்டும் தெளிவாக செய்தி சொல்ல காரணங்கள் நிறையவே உள்ளது. பெரும்பாலான ஊடகங்கள் ஏஜென்சிகள் எனப்படும் செய்தி நிறுவனங்களை நம்பியுள்ளன. அவை கொடுப்பதை அப்படியே செய்தியாக வெளியிடுகின்றன. நேரடியாக வாக்கு எண்ணும் மையங்களில் ஆட்களை நிறுத்தி செய்தி சேகரிப்பது மிகவும் குறைவாகும்.
ஆனால் சிஎன்என் ஐபிஎன் அப்படி இல்லை. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் செய்தி சேகரிக்க ஆட்களை நியமித்து அவர்கள் கொடுத்த செய்தியை வைத்து இது முன்னணி மற்றும் வெற்றி தோல்வி நிலவரத்தை வெளியிட்டு வந்ததால் குழப்பம் இல்லாமல் செய்தி தர முடிந்துள்ளது.
மேலும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஈடிவியுடன் கை கோர்த்து சிஎன்என் செய்தி வெளியிட்டு வருகிறது. இதுதான் மற்ற சேனல்களை விட சிஎன்என் சற்று குழப்பமில்லாமல் செய்தி தர முடிந்ததற்கான காரணம்.
ராஜ்யசபா டிவி நிதீஷ் கூட்டணிக்கு முன்னணி என்று கூறி வந்தது. அதேசமயம், லோக்சபா கூட்டணி பாஜக கூட்டணிக்கு முன்னிலை என்று கூறி வந்தது.
இந்தக் குழப்பத்திற்குத் தேர்தல் ஆணையத்தின் இணையதளம்தான் முடிவு கட்டியது. 10 மணியளவில் நிதீஷ் கூட்டணி முன்னிலை வகிப்பதாக தேர்தல் ஆணைய செய்தி கூறியதைத் தொடர்ந்து அத்தனை ஊடகங்களும் சரியான பாதைக்குத் திரும்பினர்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications