அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தேர்தல்.. புறக்கணித்தது தமிழக வாழ்வுரிமைக் கட்சி
உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்ததையடுத்து 3 தொகுதிகளுக்கான தேர்தலையும் புறக்கணித்தது தமிழக வாழ்வுரிமைக் கட்சி
சென்னை; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் இந்திய மத்திய பாஜக அரசைக் கண்டித்து தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதித் தேர்தலையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி புறக்கணித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுகுறித்து வேல்முருகன் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் காவிரி ஆற்று நீர் உரிமையை கர்நாடகாவுக்கு காவு கொடுக்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவே முடியாது என பச்சைத்துரோகம் செய்து வரும் இந்திய மத்திய பாரதிய ஜனதா அரசைக் கண்டித்து தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை தமிழக வாழ்வுரிமைக் கட்சி புறக்கணிக்கிறது.

காவிரி ஆற்று நீர் உரிமை கோரியதற்காக கர்நாடகாவில் தமிழர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது. தமிழர்களின் உடைமைகள் சூறையாடப்பட்டன. ஆனாலும் இந்திய மத்திய அரசு அதைக் கண்டிக்கவும் இல்லை. தமிழகத்துக்கு திறந்துவிடப்பட வேண்டிய காவிரி நீரையும் திறந்துவிட எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இதனால் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு முடிவுகளின்படி உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தோம்.
இதன் பின்னரும் தொடர்ந்தும் தமிழகத்தின் காவிரி ஆற்று நீர் உரிமையை கர்நாடகா மறுத்து வருகிறது. இந்திய மத்திய பாஜக அரசோ உச்சகட்டமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மறுத்து வருகிறது. தமிழகத்தை வஞ்சிப்பது ஒன்றையே கொள்கையாக வைத்திருக்கிறது இந்திய மத்திய பாஜக அரசு.
இந்திய மத்திய பாஜக அரசின் இந்த துரோகத்தைக் கண்டிக்கும் வகையில் நவம்பர் 19-ந் தேதியன்று நடைபெற உள்ள தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான தேர்தலை தமிழக வாழ்வுரிமைக் கட்சி புறக்கணிக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.
-
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ












Click it and Unblock the Notifications