பண்ருட்டி வேல்முருகனின் த.வா.கவுக்கு கேமரா சின்னம் ஒதுக்கீடு
Subscribe to Oneindia Tamil
நெய்வேலி: தமிழக சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடும் பண்ருட்டி வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு கேமரா சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் த.வா.க. இடம்பெற்றிருந்தது. ஆனால் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. த.வா.க.வுக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்காமல் அதிமுக வேட்பாளர்களை அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய வேல்முருகன் தனித்துப் போட்டியிடுவோம் என அறிவித்தார். மேலும் நெய்வேலி சட்டசபை தொகுதியில் தாம் போட்டியிட உள்ளதாகவும் வேல்முருகன் கூறினார்.
இந்நிலையில் நெய்வேலியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன் தம்முடைய த.வா.க.வுக்கு கேமரா சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறினார்.












Click it and Unblock the Notifications