காடுவெட்டி குரு மறைவு... அஞ்சலி செலுத்த முடியாமல் கதறி அழுத வேல்முருகன்
காடுவெட்டி குரு மறைவு செய்தியை கேட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கதறி அழுதார்.
Recommended Video

சென்னை: காடுவெட்டி குரு மறைவு செய்தியை கேட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கதறி அழுதார்.
பாமகவின் முக்கிய தலைவர்களுல் ஒருவரும் வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குரு நேற்று காலாமானார். கடந்த 40 நாட்களுக்கும் மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் நேற்றிரவு மாராடைப்பால் மரணமடைந்தார்.
அவரது உடல் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

குரு மறைவுக்கு இரங்கல்
இந்நிலையில் ஜெ. குரு மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். புழல் சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசினார்.

சட்டத்திற்கு புறம்பாக
அவர் பேசியதாவது, ‘மாவீரன் காடுவெட்டி குரு அவர்களின் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே இந்த திட்டமிட்ட கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளின் அராஜகப் போக்கு சட்டத்திற்கு புறம்பாக இந்த கைது சம்பவம் நடந்துள்ளது‘ என கூறினார்.

வேல்முருகன் வேண்டுகோள்
காடுவெட்டி குரு அவர்களின் இறுதி நிகழ்ச்சியில் தங்களது கட்சியை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த வேண்டும் என அவரது தொண்டர்களுக்கு வேல்முருகன் வேண்டுகோள் விடுத்தார்.

கதறி அழுத வேல்முருகன்
25 ஆண்டுகாலம் ஒன்றாக தங்களோடு பயணித்த காடுவெட்டி குரு அவர்களின் மறைவு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications