நீட் தேர்வு சென்னை சிபிஎஸ்இ அலுவலகத்தில் வேல்முருகன் நடத்திய 3 மணி நேர உள்ளிருப்பு போராட்டம் நிறைவு
சென்னை அண்ணாநகரில் உள்ள சி.பி.எஸ்.இ. அலுவலகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் 3 மணி நேரமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
Recommended Video

சென்னை: அண்ணாநகரில் உள்ள சி.பி.எஸ்.இ. அலுவலகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் 3 மணி நேரமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து 3 மணி நேரத்திற்கு பின் வேல்முருகன் போராட்டத்தை கைவிட்டார்.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் போதுமான தேர்வு மையங்கள் அமைக்கப்படவில்லை.

இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்னை அண்ணாநகரில் உள்ள சிபிஎஸ்இ அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
முன்னதாக தமிழக மாணவர்கள் தமிழகத்திலேயே தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேல்முருகன் தென்மண்டல சிபிஎஸ்இ இயக்குநரிடம் மனு அளித்தார்.
மேலும் வெளி மாநிலங்களில் தேர்வு எழுதும் மாணவர்களை விமானம் மூலம் அழைத்து செல்ல சிபிஎஸ்இ நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்தார்.
நீட் தேர்வு மையத்தை தமிழகத்திலேயே அமைக்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். வேல்முருகன் 3 மணி நேரமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் சிபிஎஸ்இ அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
3 மணி நேரத்திற்கு பின் போலீசாரின் கோரிக்கையை ஏற்ற வேல்முருகன் போராட்டத்தை கைவிட்டார். நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும் வேல்முருகன் தெரிவித்தார்.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications