ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தமிழக வாழ்வுரிமை கட்சி சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம்
சேப்பாக்கம் அரசு விருந்தினர் மளிகை அருகில் இன்று தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
சென்னை: ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் அறிவித்திருந்தார். இந்தநிலையில் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மளிகை அருகில் ஆர்ப்பாட்டம் மட்டும் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 14வது நாளாக பேரெழுச்சியுடன் அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு இளைஞர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்து மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும். இதை வலியுறுத்தி இன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமை கட்சி அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று குடியரசுத் தலைவர் சென்னை வந்துள்ளதால் காவல் துறையால் அம்முற்றுகைப் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனவே சேப்பாக்கம் அரசு விருந்தினர் மளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சித் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.