காடுவெட்டி ஜெ.குரு மறைவு.. தமிழக வாழ்வுரிமைக் கட்சி இரங்கல்
காடுவெட்டி ஜெ.குரு மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: காடுவெட்டி ஜெ.குரு மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.
பாமகவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி ஜெ. குரு உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.
நுரையீரல் தொற்றால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த ஜெ.குருவுக்கு நேற்றிரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் உயிர்பிரிந்தது. வன்னியர் சங்க தலைவராக இருந்த குரு வன்னியர் சமூக மக்கள் நலனுக்காக குரல் கொடுத்து வந்தார்.
இந்நிலையில் அவரது மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தனது டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் சமூக நீதி போராளி காடுவெட்டி ஜெ.குரு அவர்கள் மறைந்தார்!
சமூக நீதி போராளி காடுவெட்டி ஜெ.குரு அவர்கள் மறைந்தார்!
— Velmurugan.T (@VelmuruganTVK) May 25, 2018
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாரோடும் அவரது சீரிய தலைமையைப் பெற்றிருந்த வன்னியர் சங்கத்தாரோடும் அவர் மறைந்த துக்கத்தையும் துயரையும் பகிர்ந்து கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!https://t.co/jiWbGEEFeQ pic.twitter.com/568KDJzk5M
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாரோடும் அவரது சீரிய தலைமையைப் பெற்றிருந்த வன்னியர் சங்கத்தாரோடும் அவர் மறைந்த துக்கத்தையும் துயரையும் பகிர்ந்து கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.