சிறுவாணி: கேரளா எல்லையில் முற்றுகை போராட்டம் நடத்திய வேல்முருகன் உட்பட 1,000க்கும் மேற்பட்டோர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரளாவைக் கண்டித்து இன்று பொள்ளாச்சி அருகே எல்லையில் முற்றுகைப் போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உட்பட 1,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவதற்கான சுற்றுச் சூழல் ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தமிழகத்தை கொந்தளிக்க வைத்துள்ளது.

தொடர் போராட்டங்கள்

தொடர் போராட்டங்கள்

கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததைக் கண்டித்து தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

வேல்முருகன் போராட்டம்

வேல்முருகன் போராட்டம்

இதனிடையே பொள்ளாச்சி அருகே கேரளா எல்லையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் இன்று கேரளா வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார்.

கைது

கைது

ஆனால் போலீசார் எல்லையிலேயே அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 1000க்கும் மேற்பட்டோர் எல்லையில் திரண்டு போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஏழு தமிழர் விடுதலை இயக்கம்

ஏழு தமிழர் விடுதலை இயக்கம்

முன்னதாக பொள்ளாச்சியில் நடைபெற்ற ஏழு தமிழர் விடுதலைக்கான ஏழு லட்சம் கையெழுத்து பெறும் இயக்கத்தை தொடங்கி வைத்தார் வேல்முருகன். மாணவர் இயக்கங்கள் இந்த கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+