இப்போதாவது விஜய் கரூர்க்கு செல்வாரா? இனி அரசு பாதுகாப்பு தரலனு சொல்ல முடியாதே.. திமுகவினர் கேள்வி
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜயின் தவெக கட்சி நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் முன்னணியில் உள்ளது. இதனால் தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கரூருக்கு சென்று விஜய் சந்திக்கவில்லை. மாறாக பாதிக்கபட்ட குடும்பத்தினரை தனியார் பேருந்து மூலம் மகாபலிபுரம் அழைத்து வந்து அங்குள்ள ஒரு நட்சத்திர விடுதியில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் ஆளும் அரசு தமக்கு உரிய அனுமதி வழங்கவில்லை என்றும், பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக தான் எங்கும் செல்லவில்லை என்றும் கூறி வந்தார். ஆனால் தற்போது விஜய் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் விஜய் தற்போது கரூருக்கு முதல் பயணமாக சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பார்ப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது. விஜய் ஒருவேளை முதலமைச்சராக பதவி ஏற்றால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு அழைத்து வருவாரா என்று கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் விஜய் ஆட்சி அமையும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதால் இனி அவர் வீட்டிலேயே இருக்க முடியாது என்றும், மக்களை அதிக அளவு வந்து சந்திக்க வேண்டும் என்றும் திமுகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பலரும் முன்பு எல்லாம் விஜய் எல்லாம் திமுகவின் சதி என்று கூறி காலத்தை ஓட்டி வந்தார்.
தற்போது ஆட்சியை அவரிடம் இருக்கும் பட்சத்தில் இப்போதும் திமுக மீது குறை சொல்ல முடியாது என்றும் அவர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இதனால் முதலமைச்சராக ஒருவேளை விஜய் பொறுப்பேற்றால் அவருடைய முதல் பயணம் கரூருக்காக தான் இருக்கும் என்றும் அவர்களுடைய கட்சித் தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
கே.என்.நேரு மீது FIR.. டெல்லிக்கு பந்தை திருப்பிய முதல்வர் விஜய்.. அமலாக்கத்துறை மாஸ்டர் ஆட்டம்? -
ஸ்கீமுக்கு 10 செகண்டா? தலைமை செயலகத்தில் 75 நிமிட சர்ப்ரைஸ்! 436 திட்டங்களை விஜய் நகர்த்தியது எப்படி? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது! -
தமிழ்நாடு விஷம் குடித்து இருக்கிறது.. மக்கள் புரிந்து கொள்வார்கள்! தேர்தல் முடிவு பற்றி சுகி சிவம் பரபர பேச்சு -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
எதிர்க்கட்சிகள் தீர்ந்து போன சக்தி சரி.. அப்போ நீங்க? விஜய்யை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய வேல்முருகன் -
குர்பானி கட்டுப்பாடு.. "நீதிமன்றத்தில் ஒரு பேச்சு, அமைச்சர் ஒரு பேச்சு ஏன்!" எஸ்டிபிஐ கடும் தாக்கு -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது?












Click it and Unblock the Notifications