தமிழக விவசாயிகள் போராட்டத்தை சட்டை செய்யாத பாஜகவை கண்டித்து சென்னையில் ரிசர்வ் வங்கி முற்றுகை
14 நாட்களாக டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை கண்டு கொள்ளாத பாஜக அரசைக் கண்டித்து சென்னை ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
சென்னை: விவசாயிகளின் பிரச்சனையைத் தீர்க்கக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மகளிர் பாசறை சார்பில் சென்னை ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 14ம் தேதியில் இருந்து இன்று வரை, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
விவசாயிகளின் கோரிக்கை என்ன என்று கூட கேட்க மத்தியில் ஆளும் பாஜக அரசு மறுத்து வருகிறது. ஆனாலும் சற்றும் சளைக்காத விவசாயிகள் தினந்தோறும் ஒரு போராட்ட வடிவத்தை மேற்கொண்டு உறுதியோடு போராடி வருகின்றனர்.

ரிசர்வ் பேங்க் முற்றுகை
இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்தைக் கண்டு கொள்ளாத மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மகளிர் பாசறை சார்பில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. காலை 11.30 மணியளவில் தொடங்கிய இந்தப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டார்.

ஏராளமான பெண்கள்
இந்தப் போராட்டத்தில் மகளிர் பாசறையைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அப்போது, மத்திய அரசுக்கு எதிராகவும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள்.

அழியும் விவசாயம்
அழியும் விவசாயத்தை காக்கவும், மடியும் விவசாயிகளை காக்க வேண்டியது அவசியம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறினார். மேலும், தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜகவை கண்டித்து பேசினார்.

முதல்வர் தலையிட..
14வது நாளாக எலிக்கறியைத் தின்று போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. ஆனாலும் தமிழக முதல்வர் இதுபற்றி இன்னும் வாயே திறக்காமல் இருக்கிறார். விரைவில், விவசாயிகளின் கோரிக்கை பற்றி மத்திய அரசிடம் டெல்லி சென்று முதல்வர் பேச வேண்டும் என்று விவசாயிகள் எதிர்ப்பார்த்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications